Monday 12 January 2015

கையறுநிலைக் காத்திருப்பு



உரிமையோடான நேசத்திற்கு
உளம் ஏங்கி உயிர்துடிக்கும்.

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்தின் நிகழ்வுகளை
சொல்லொணா துயருடன்
சொல்லி அழாச் சுமையுடன்
காத்திருக்கும் கணங்கள்
கவியில் சொல்லிட முடிவதில்லை

காலாண்டு நீடிக்கவில்லை
கடல் போல அன்பு
காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க
காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி

முடிவில்லா இப்பெருவெளியில்
அரவமற்று அனாதையாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில்
உறக்கம் மட்டுமா தொலைந்து போவது?


No comments:

Post a Comment