Sunday 1 February 2015

நற்றமிழாலும் சொற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த



நற்றமிழாலும் சொற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த
சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடன்
கலைமகளாம் , அன்பின் திருமகளாம்
அக்கா கலைசெல்வியுடன்
இல்லறத்தில் இணைந்து
இருபத்தியேழாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும்
எங்கள் ஆசான் திரு இரா. குமார் அவர்களுக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துகள்

எளிமையின் உதாரணமாய்
எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்தும் நுன் திறமையுடன்
ஏற்றம் மாற்றம் எதுவானாலும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூடி
உழைப் பென்று வந்துவிட்டால்
ஒய்வுறக்கம் தேடா வேகத்தோடு
உண்மை நேர்மையை அணியாய் கொண்ட
நேர் நிமிர் நெஞ்சம் கொண்டு
உதவியென்று வருவோர்க்கு மட்டுமல்லாது
தேவையறிந்து செய்யும் கர்ண பிறப்பாய்
"தான் " எனும் கனம் சிறிதும்
தலைக்கேற்றிக் கொள்ளா பண்பாளராய்
தமிழால் தான் சிறக்க
தன்னால் உடனிருப்போர் சிறப்புறச் செய்யபவர்

இத்தனையும் எங்கள் ஆசான் என்றால்
அவரின் உற்ற துணையாய்
பக்க பலமாய் ....
அவர் பணி செவ்வனே செய்ய
வழிவகுத்து ,
வாழ்வெனும் ஏற்ற தாழ்வுகளில்
உடனிருந்து அரவணைத்து
எங்கள் ஆசானை போற்றுபவர்
அன்பின் அக்கா கலைச்செல்வி அவர்கள்
இவர்களின் இல்லறத்தில் நல்லறமாய்
விளைந்த நல் முத்து
எங்கள் செல்வம் முல்லைசெல்வன் ...
தமிழ் அன்னையின் ஆசிகளோடு
என் அன்னையின் அருளோடு
வள்ளுவன் வாசுகி போல
நூற்றாண்டுகள் நீடு வாழ வேண்டுகிறேன்
பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கிய
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!
வாழ்த்தும் வயதில்லை
வணங்கி பணிகிறேன் நின் தாள் ஆசானே !!
நல் மொழி கூறி ஆசிர்வதியுங்கள் அக்காளுடன்!!!